May 23, 2009

நிலவே என்னிடம் நெருந்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை
மலரே என்னிடம் மயங்காதே நீ மயங்கும் வகையில் நானில்லை
கோடை இல் ஒரு நாள் மழை வரலாம் என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
பாலையில் ஒரு நாள் கொடிவரலாம் என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ
நிலவே என்னிடம் நெருந்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை
ஊமையின் கனவை யார் அறிவார் என் உள்ளத்தின் கதவை யார் திறப்பார்
மூடிய மேகம் கலையும்முன்னே நீ பாட வந்தாயோ வெண்ணிலவே
நிலவே என்னிடம் நெருந்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை
அமைதி இல்லாத நேரத்திலே அந்த ஆண்டவன் எனையே படைத்து விட்டான்
நிம்மதி இழந்து நான் அலைந்தேன் இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்
நிலவே என்னிடம் நெருந்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை